ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி நடித்த 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை பார்வதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதன்காரணமாக அவர் மீது மம்முட்டியின் ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் வசைமாரி பொழிய, மம்முட்டி நேரடியாக தலையிட்டு அவர்களை அடக்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் பார்வதி இப்போதும் அதை விடுவதாக தெரியவில்லை. சமீபத்தில் அவர், இந்த விஷயத்தில் மம்முட்டி தனது ரசிகர்களுக்கு என்ன கூறினாரோ, அதில் தனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை என்றும், ஆனாலும் அவர் இந்த விஷயத்தில் தனக்கு உதவுவதற்காக முன்வந்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, பல நடிகைகள் பரபரப்பை கிளப்பிய 'காஸ்டிங் கவுச்' விஷயம் தொடர்பாக விரைவில் தானும் சில தகவல்களை வெளியிட இருப்பதாக பகீர் கிளப்பியுள்ளார் பார்வதி. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட சிலரின் பெயர்களை வெளியிட்டபின் மக்கள் ஆதரவு தனக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் எனவும் ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார் பார்வதி.
வடிவேலு பட காமெடி பாணியில் சொன்னால், “இன்னும் எத்தனை தலை உருளப்போகிறதோ..?”