ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களாக தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் மோகன்லால். இதனை பாராட்டி கோழிக்கோடு பல்கலைக்கழகம் மோகன்லாலுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளா கவர்னர் பி.சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பட்டம் பெற்றது குறித்து மோகன்லால் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்குமுன் 2010ல் கேரளாவில் காலடியை சேர்ந்த ஸ்ரீசங்கராச்சாரியா பல்கலைக்கழகம் மோகன்லாலுக்கு அவர் திரையுலகம் வாயிலாக சமஸ்கிருதத்திற்கு தந்த பங்களிப்பை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.