தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த கட்சியை ஆந்திர மக்கள் ஆதரிக்கவில்லை. அதனால் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் இப்போது அரசியலை விட்டு விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி.
இந்த நிலையில், அவரது தம்பியான நடிகர் பவன்கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன்காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வரும் பவன்கல்யாண், சில தினங்களுக்கு முன்பு அனந்தபூரில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, உங்களிடம் ஓட்டு கேட்பதற்காக இங்கே வரவில்லை. நானும் உங்களைப் போலவே விவசாயி தான். அதன்பிறகுதான் நான் நடிகன்.
உலக மக்களின் பசியை போக்கும் விவசாயிகள் பசியில் வாடுகிறார்கள். கடன் சுமையால் கஷ்டப்படுகிறார்கள். அதனால் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டுமென்று நான் போராடப்போகிறேன். இதற்காக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெருவாரியான விவசாயிகளை சந்திக்கப்போகிறேன் என்று பேசியுள்ளார். பவன்கல்யாணின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.