அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் பாரத் அனே நேனு. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.
அதனால் சங்கராந்திக்கு வெளியாகும் என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பர்ஸ்ட் லுக் சங்கராந்திக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, சங்கராந்திக்கு பர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று மகேஷ்பாபு கேட்டுக்கொண்டதை அடுத்து பாரத் அனே நேனு படத்தின் முதல் தோற்றத்தை ஜனவரி 15-ந்தேதி வெளியிடப்படும் என்று கொரட்டல்ல சிவா அறிவித்துள்ளார். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.