தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழர் திருநாளான பொங்கல் தினம், ஆந்திரா, தெலுங்கானாவிலும் 'சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போலவே, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பொங்கல் போட்டிகளில் கடும் போட்டி உள்ளது. தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களான பவன் கல்யாண், பாலகிருஷ்ணா இருவருக்கும் இடையேதான் இந்த பொங்கலில் கடும் போட்டி. கூடவே, தமிழ் ஹீரோவான சூர்யாவும் சேர்ந்து கொண்டுள்ளார்.
பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நடித்த 'அஞ்ஞாதவாசி' படம் பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக 10ம் தேதியே வெளியாகிவிட்டது. படத்திற்குப் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்துள்ள 'ஜெய் சிம்ஹா' படம் இன்று வெளியாகிறது. படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக அமைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும் என்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் டப்பிங் ஆகி இன்று வெளியாகியுள்ளது. ஒரு நேரடிப் படத்தைப் போல இப்படத்தை தெலுங்கில் விளம்பரம் செய்துள்ளார்கள். பவன்கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோரின் நேரடிப் படங்களுக்கு இணையாக சூர்யா நடித்துள்ள 'கேங்' படமும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.