தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது மலையாளத்தில் 'ப்ராண' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன். மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். ஏற்கனவே இவருடைய டைரக்சனில் இரண்டு படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இப்போது மூன்றாவது முறையாக வி.கே.பிரகாஷ் டைரக்சனில் நடிக்கிறார்.
'குயீன்' போல ஒரே கதை, ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் நான்கு நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு வருவது நமக்கு தெரியும். ஆனால் நான்கு மொழிகளிலும் ஒரே கதாநாயகி ஒரே நேரத்தில் நடிக்கிறார் என்றால் அந்த சாதனைக்கு முதல் சொந்தக்காரர் நித்யா மேனன் தான் என்கிறார்கள்.
இதற்கு முன் இருமொழி படங்களில் நடித்திருந்தாலும், நான்கு மொழிகளுக்குமான காட்சிகளை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி எடுப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே களைப்பாகி விடுகிறாராம் நித்யா மேனன். இதில் மற்ற மூன்று மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் அவருக்கு இந்தியில் காட்சிகளை படமாக்கும்போது தான் சற்றே சிரமமாக இருக்கிறதாம்.