ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் வெளியான 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியது தனக்கு வருத்தமளிக்கிறது என ஒரு நிகழ்வில் நடிகை பார்வதி குறிப்பிட்டார். இதை தொடர்ந்து மமுட்டியின் ரசிகர்களில் சிலர் எல்லை மீறிப்போய், அவருக்கு கொலை, பாலாதகார மிரட்டல்கள் விடுத்தனர். பார்வதி கொடுத்த புகாரின் பேரில் இது தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் தான் பேசியது குறித்து மம்முட்டியிடம் பார்வதி விளக்கம் சொல்ல, போனிலேயே அவருக்கு ஆறுதல் சொன்னதோடு, இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவரை தான் தப்பாக நினைக்கவே இல்லை என்றும் கூறினாராம் மம்முட்டி. இதைத்தொடர்ந்துதான் மம்முட்டி தனது ரசிகர்களிடம் கண்ணியமாக நடக்குமாறு அறிவுரை கூறினார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தின் பின்னணியில், சர்ச்சைக்கு வித்திட்ட 'கசபா' படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் இருப்பதாகவும் அவர்தான் சோஷியல் மீடியா மூலமாக மம்முட்டியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களை பார்வதிக்கு எதிராக தூண்டி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.