‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அறிமுக இயக்குனர்கள் தங்களது படத்திற்கு ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமாக டைட்டில் பிடிக்க மெனக்கெடுவது தெரிந்த விஷயம் தான். அந்தவகையில் மலையாளத்தில் தனது படத்திற்கு 'வாரிக்குழியிலே கொலபாதகம்' என டைட்டில் வைத்துள்ளார் அறிமுக இயக்குனரான ரெஜிஸ் மிதிலா என்பவர்.
இந்த டைட்டிலுக்கு என ஒரு வரலாறு உண்டு. கடந்த 27 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி மோகன்லால் இணைந்து நடித்த படம் 'நம்பர் 2௦ மெட்ராஸ் மெயில்'. இந்தப்படத்தில் மம்முட்டி நடிகர் மம்முட்டியாகவே நடித்திருந்தார். கேரளாவில் இருந்து சென்னைக்கு அவர் பயணமாகும் ரயிலில், உடன் பயணிக்கும் மோகன்லால் தன்னுடைய எழுத்தாளர் நண்பரான மணியம்பிள்ள ராஜூவுக்காக மம்முட்டியிடம் ரயிலிலேயே கதை கேட்க சொல்லி சிபாரிசு செய்வார்.
அப்போது மணியம்பிள்ள ராஜூ சொன்ன கதையின் டைட்டில் தான் 'வாரிக்குழியிலே கொலபாதகம்'.. காமெடியாக உருவாக்கப்பட்டிருந்த அந்த கதை சொல்லும் காட்சி மூலமாக ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத பெயராக மாறிவிட்டிருந்த அந்த டைட்டிலைத்தான் இப்போது புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
சமீபத்தில் இந்தப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை பிரயாகா மார்ட்டின் வெளியிட்டார்.