பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
மலையாள முன்னணி நடிகை பார்வதி. தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட பார்வதி நல்ல படங்களை தேர்வு செய்துதான் நடிப்பார். தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுகிறவர்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச பட விழாவில் ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த கசபா படம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய பார்வதி. மம்முட்டி போன்று ஒரு பெரிய நடிகர் பெண்கள் குறித்து படத்தில் தவறாக பேசி உள்ளார். ஒரு பெண்ணாக அது எனக்கு பெரிய வருத்தம் என்றார்.
அவரது இந்த கருத்துக்கு மம்முட்டி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பார்வதியை கடுமையாக விமர்சித்தனர், திட்டினர். அதற்கு பார்வதி பதில் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில் பார்வதி மீதான விமர்சனங்கள் மிரட்டலாகவும் மாறியது. பாலக்காடு அருகே உள்ள வடக்கன்சேரியை சேர்ந்த மம்முட்டி ரசிகர் மன்ற நிர்வாகி பிரிண்டோ. பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பார்வதி கேரள டி.ஜி.பி லோக்நாத் பெக்ராவிடம் புகார் அளித்தார். அவரின் உத்தரவின் பேரில் பிரிண்டோவை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.