'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி-2விற்கு பிறகு சுஜித் இயக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி படங்களைப்போன்றே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சில அதிரடியான சண்டை காட்சிகளை துபாய் மற்றும் அபுதாபியில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அந்த நாடுகளில் இவர்கள் கேட்ட லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதன்காரணமாக அந்த சண்டை காட்சிகளுக்கு பிறகு படமாக்கயிருந்த காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்க தயாராகி விட்டனர். அதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் சாஹோ படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.
அதன்பிறகு சண்டை காட்சிகளை படமாக்க துபாய், அபுதாபியில் அனுமதி கிடைத்ததும் அங்கு முகாமிடுகிறதாம் சாஹோ பட யூனிட்.