'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
நடிகர்களுக்கு எப்படி அரசியலில் குதிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறதோ, அதேபோல கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்கிறது. சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் சினிமாவில் நடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக மலையாள படத்தில் தனது சினிமா இன்னிங்சை தொடங்க உள்ளார். சமீபத்தில் கேரளா வந்திருந்த பதானை ஒரு விழாவில் சந்தித்து பேசிய மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், இருவரும் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டு, “இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.. காத்திருங்கள்” என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிருத்விராஜின் 'சப்தமஸ்ரீ தஸ்கரா', குஞ்சாக்கோ நடித்த 'லார்டு லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.