'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேவையில்லாமல் முகநூலில் வாயை கொடுத்து வழிய சிக்கலை இழுத்து விட்டுகொண்டுள்ளார் மலையாள சினிமா இயக்குனரும் நடிகருமான ரூபேஷ் பீதாம்பரன். கடந்த வெள்ளியன்று நிவின்பாலி முதன்முறையாக நடித்துள்ள நேரடி தமிழ்ப்படமான 'ரிச்சி', கேரளாவிலும் வெளியானது. ஆனால் இரண்டு பக்கமும் இந்தப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பில்லை
இந்நிலையில்தான் மலையாள நடிகரும் இயக்குனருமான ரூபேஷ் பீதாம்பரன் படம் வெளியான அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் 'ரிச்சி'யின் ஒரிஜினலான கன்னடப்படமான 'உள்ளிடவரு கண்டந்தே' படத்தை பற்றியும் அதில் ஹீரோவாக நடித்திருந்த ரக்சித் ஷெட்டி எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார் என்பதையும் புகழ்ந்து தள்ளியிருந்தார். ரசிகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வலுக்கவே பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
ஆனால், அவரது செயல் தங்களது 'ரிச்சி' படத்தை மட்டம் தட்டுவதாகவும், ரசிகர்கள் மத்தியில் படம் சரியில்லை என மறைமுகமாக குறைசொல்லி, படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் விதமாக இருப்பதாகவும் 'ரிச்சி' பட தயாரிப்பாளர்கள், ரூபேஷ் பீதாம்பரன் மீது புகார் அளித்துள்ளார்களாம்.