ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது போன்று இப்போது அவரது தம்பியான நடிகர் பவன் கல்யாணும் ஜனாசேனா பார்ட்டி என்றொரு கட்சியை தொடங்கியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அதனால் இப்போது தனது கட்சியின் பிரசாரத்தை தொடங்கிவிட்டார் பவன்கல்யாண். அந்த வகையில், கடந்த நான்கு நாட்களாக, சலோ சல் யாத்திரையை தொடங்கிய அவர் வைசாக், ராஜமந்திரி, விஜயவாடா உள்பட பல நகரங்களில் மக்கள் முன்பு பேசினார். அப்போது தனது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசாதபோதும், தனது கட்சியில் நல்ல தலைவர்கள், இளைஞர்களுக்கு அதிக இடமளிக்கப்போவதாக கூறியுள்ளார்.
மேலும், விஜயவாடாவில் ஒரு படகு விபத்தில் இறந்து போனவர்களின் உறவினர்களை அழைத்து பேசிய பவன் கல்யாண், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இடம்பெற்றிருந்த சில நண்பர் கள் அவரை ஏமாற்றி விட்டது பற்றியும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.