ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, கடந்த வருடம் ஜனவரி மாதம் திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்கு ஒரே மகள் ஸ்ரீமயி. கல்பனாவிற்குப்பின் அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார்..
ஆனால் தற்போது ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் ஸ்ரீ சங்க்யாவும் அவரது பெரியம்மா கலாரஞ்சனியும். அறிமுக இயக்குனர் சுமேஷ் லால் இயக்கும் இந்த படத்தில் நடிகர்கள் கலாபவன் சாஜனும் டினி டாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.