துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள குணச்சித்திர நடிகரும் மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுமான அபி என்பவர் காலமானார். அனைவரது அபிமானத்தையும் பெற்ற இவரது மறைவுக்கு மலையாள திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. இந்த சோக நிகழ்வு நடந்த சமயத்தில் நடிகர் திலீப் துபாயில் இருந்ததால் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை.
பின் கேரளா திரும்பியதும் அபியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திலீப், அபியின் மகனும் தற்போது இளம் நடிகராக நடித்துவரும் நடிகருமான ஷேன் நிகமுக்கு தான் எப்போதும் துணை நிற்பேன் என ஆறுதல் கூறியுள்ளார்.
மறைந்த அபியும் திலீப்பும் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள் என்பதும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகளாக ஒன்றாக இணைந்து பயணித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.