வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். நேற்று சாலோ ரே சாலோ ரே சால் -என்ற பெயரில் தனது பிரச்சார யாத்திரையை அவர் தொடங்கினார்.
அப்போது ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் என்ற இளைஞரின் பெற்றோரை அழைத்து பேசினர் பவன் கல்யாண். அதோடு அந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.
மக்கள் விரோத செயல்களை ஜனசேனா பார்ட்டி பொறுத்துக் கொள்ளாது. மக்களை சூழ்ந்து கொண்டுள்ள பிரச்னைகளை விடுவிடுக்க, நல்லது செய்ய, சேவை செய்ய அரசியலில் இறங்கியிருக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வருகிறேன். விபத்துக்கள், குற்றங்கள், காட்டுமிராண்டி தனங்களை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பேசினார்.
பவன்கல்யாணின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பவன் கல்யாணின் இந்த அரசியல் யாத்திரை பயணம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.