இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக்காத ஒரு இடம், பெருமை, சமீபகாலமாக அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கிடைத்துள்ளது. ஆம்.. யாஹூ வெளியிட்ட இந்த 2017க்கான இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்து பேர் கொண்ட பட்டியலில் காவ்யா மாதவனுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகையும் அவர் மட்டும் தான். கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை கடத்தல் வழக்கில், தனது கணவர் திலீப்புடன் சேர்ந்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிகம் பேரால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களில் சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளனர்.