டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்துவின் லைப் ஆப் ஜோஸுட்டி படத்தில் திலீப்புக்கு ஜோடியாகவும், ஞான் படத்தில் துல்கருக்கு ஜோடியாகவும் நடித்தவர் மலையாள நடிகை ஜோதிகிருஷ்ணா.
சமீபத்தில் தான் இவரது திருமணம் முடிந்துள்ள நிலையில் ஸ்ரீபத்ரா என்கிற போலியான பேஸ்புக் ஐடியில் இருந்து, ஜோதிகிருஷ்ணாவின் கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டு நபர்களுக்கு, “இந்தப் பெண்ணை போய் திருமணம் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்” என்பது போன்ற சில அருவருப்பான மெசேஜ்கள் அனுப்பப்பட்டன.
இதைக்கண்டு ஜோதி கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்தாலும், தனது கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டினர் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தனது திருமணத்திற்கு பின்னும் கூட இப்படி அவதூறு பரப்பும் அந்த ஆண்/பெண் தனது வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும் என்றும் கண்டித்துள்ளார்.
கடந்த வருடம் கூட இவர் ஆபாசமாக காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பரவியதும் ஆனால் அப்போதும், இப்போதும் இதுகுறித்து அவர் போலீசில் ஏதும் புகார் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.