ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தான் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்'. இது சில வருடங்களுக்கு முன் அவர் நடித்து வெற்றிபெற்ற 'புண்யாலன் அகர்பத்தீஸ்' என்கிற படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி, தற்போது வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து அடுத்ததாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக ஜெயசூர்யாவின் 'ஆடு-2' ரிலீசாக இருக்கிறது. இதுவும் கடந்த வருடம் வெளியாகி ஓரளவு சுமாராக ஓடிய ஜெயசூர்யாவின் 'ஆடு ஒரு பீகர ஜீவியானு' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெரும் பட்சத்தில் தனது முந்தைய ஹிட் படங்களில் சிலவற்றின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து உருவாக்கும் யோசனையில் இருக்கிறாராம் ஜெயசூர்யா.