ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய இருவரும் தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருபவர்கள். இவர்கள் இருவரும் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் அந்த படத்தில் இடம் பெற்ற காஜல் அகர்வால், சமந்தா ஆகிய இருவருக்கும் தான் படத்தில் முக்கியத்துவமான நாயகிகள் வேடம் கொடுத்திருப்பார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால் மெர்சல் படம் திரைக்கு வந்தபோது தான் பிளாஷ்பேக்கில் வந்த தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நித்யாமேனனுக்கு மற்ற இரண்டு நாயகிகளையும் விட வெயிட்டான வேடம் என்பது தெரிந்தது. இந்தநிலையில், தற்போது தெலுங்கில் சுதீர் வர்மா இயக்கத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகிய இருவரும் நாயகிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே படத்தில் முன்னணி நாயகிகளாக நடிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.