'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. பின் பாஜகவில் சேர்ந்து தற்போது ராஜ்யசபா எம்.பி ஆகவும் ஆகிவிட்டார். அதனால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்று சொல்லப்பட்டது.. ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சுரேஷ்கோபி, தான் படங்களில் நடிப்பதை நிறுத்தியதற்கான அதிர்ச்சி தரும், உண்மை காரணத்தை வெளியிட்டார்.
“அரசியலில் ஈடுபட்டதால் நான் படங்களை நடிப்பதை நிறுத்தவில்லை. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டேன். அதன் வெற்றியை திரையுலகில் உள்ள ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பிலிம் சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அந்த டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள். மக்களோடு மக்களாக நேரடியாக கலந்து பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த ரியாலிட்டி ஷோவை விட்டுவிட நான் விரும்பவில்லை. அதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன்” என கூறியுள்ளார்.