நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி கைதாகி, சிறைசென்று, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் மலையாள நடிகர் திலீப்.. சமீபத்தில் இந்த வழக்கின் சார்ஜ் ஷீட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 11வது குற்றவாளியாக இருந்த திலீப்பை 8வது இடத்திற்கு மாற்றியுள்ளனர் விசாரணை அதிகாரிகள். அதுமட்டுமல்ல, அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை 11வது சாட்சியாகவும் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனை 34வது சாட்சியாகவும் இணைத்துள்ளனர்.
தனக்கும் காவ்யா மாதவனுக்குமான தொடர்பை, தனது முதல் மனைவி மஞ்சு வாரியரிடம் சொல்லிவிட்டார் என்பதனாலேயே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள நடிகை மீது நீண்ட நாட்களாக காழ்ப்புணர்ச்சியை கொண்டிருந்தார் திலீப் என இறுதி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனராம் விசாரணை அதிகாரிகள்.