ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுமார் 35 வருடங்களுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி கிருஷ்ணா, தற்போது தனது 52 வயதில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ள இவர், சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நிவின்பாலிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
இப்போது அடுத்தகட்டமாக குஞ்சாக்கோ போபன் நடிக்கும் 'குட்டநாடன் மர்பாப்பா' என்கிற படத்திற்காக முதன்முதலாக பாடகியாகவும் மாறியுள்ளார் சாந்தி. சில பேட்டிகளில் சாந்தி கிருஷ்ணா சில பாடல் வரிகளை பாடியதை பார்த்து, அவர் குரல் நன்றாக இருக்கிறதே என இசையமைப்பாளர் ராகுல்ராஜ், அவரை இந்தப்படத்தில் பாடவைக்கும் முடிவை எடுத்தாராம்.