'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
நடிகை விவகாரத்தில் சிக்கி, சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் திலீப். ஜாமீன் வழங்கப்பட்டதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றுதான் திலீப் வெளிநாடு செல்லக்கூடாது என்பது.
இந்நிலையில், கொச்சியில் 'தே புட்டு' என்கிற ஹோட்டலை நடத்தி வருகிறார் உணவு பிரியரான திலீப். துபாயிலும் அதன் கிளையை திறக்க ஏற்பாடுகளை செய்து வந்தார். அதனால் துபாய் சென்றுவர அனுமதித்து தனது பாஸ்போர்ட்டை தர வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் திலீப்.
அவரது கோரிக்கையை விசாரித்த நீதிமன்றம், திலீப் துபாய் சென்று வர ஆறு நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் இரண்டு நாட்கள் துபாய் போய் வருவதற்கான பயணத்திற்கும் நான்கு நாட்கள் துபாயில் தங்குவதற்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகை கடத்தல் வழக்கில் 1450 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று(நவ., 22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் 8-வது நபராக திலீப் சேர்க்கப்பட்டுள்ளார்.