பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள நடிகர் சுரேஷ் கோபியை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்றாலும், மோகன்லாலை வைத்து 'ஆறாம் தம்புரான்', 'பாபா கல்யாணி' 'நரசிம்ஹம்' என மலையாள சினிமாவின் மாபெரும் ஹிட்டுகளையும் கொடுத்தவர் தான் இயக்குனர் ஷாஜி கைலாஷ். தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் மீண்டும் மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரிக்காக காத்திருக்கிறார்.
ஷாஜி கைலாஷை கைதூக்கி விடும் விதமாக தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளிப்பதாக சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் மோகன்லால். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வரும் பிப்ரவரியில் ஷாஜி கைலாஷின் படத்தில் நடிக்க இருக்கிறாராம். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் துவங்கப்பட்டபோது அதன் முதல் தயாரிப்பான 'நரசிம்ஹம்' படத்தை இயக்கியவர் இந்த ஷாஜி கைலாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.