ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு 2014, 2015, 2016 ஆகிய மூன்று வருடங்களுக்கான நந்தி விருதுகளை அறிவித்தது ஆந்திர அரசு. அப்போது 2015ம் ஆண்டு விருதுகளில் ராஜமவுலியின் பாகுபலி படத்திற்கு 13 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல், பாலகிருஷ்ணா நடித்த லெஜன்ட் படத்திற்கு 9 விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்திற்கு 9 விருதுகள் அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதோடு, விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா இடம் பெற்றிருந்ததால் அவர் நடித்த படத்திற்கு அத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின.
இதையடுத்து பாலகிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில், லெஜன்ட் ஒரு சாதாரண படம் அல்ல. அந்த படத்திற்கு 9 விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இத்தனை விருதுகள் கிடைக்கும்போது கலவையான விமர்சனங்கள் எழுவது சாதாரணமான விசயமே. அதனால் லெஜன்ட் படத்திற்கு எதிராக பேசப்படும் விமர்சனங்களை நான் பெரிதாக கருதவில்லை என்று தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.