ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் அறிவிப்பாக, நடிகர் பிருத்விராஜ் முதன்முதலாக 'லூசிபர்' என்கிற படத்தின் மூலம் டைரக்சனில் காலடி எடுத்து வைக்கிறார் என்றும், அதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரபல கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார்.
ஆனால் இந்தப்படம் எப்போது துவங்கப்பட இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு இதுநாள்வரை திட்டமாக வெளியாகவில்லை. மோகன்லாலும் அவரை விட பிருத்விராஜூம் அவரவர் படங்களில் செம பிசியாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் வரும் மே-1ஆம் தேதியன்று இந்தப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என கதாசிரியர் முரளிகோபி தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.