தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கடேச பிரசாத் (தாயாக ரோகினி நடித்தார்). இவர் தெலுங்கில் பெரிய நடிகர் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய நடிகர் ஆனார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெங்கட பிரசாத் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாராம். சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்த பெண்ணை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். 2 முறை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கட் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு போதை மருந்து கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கட பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.