நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடித்த படம் கைதி எண் 150. இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதையடுத்து ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்து கதை என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்காக 200 இங்கிலாந்து நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளனர். அவர்கள் பலர் ஜூனியர் நடிகர்களே என்றாலும், சிலர் முக்கியமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்களாம்.