ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடித்த படம் கைதி எண் 150. இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதையடுத்து ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்து கதை என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்காக 200 இங்கிலாந்து நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளனர். அவர்கள் பலர் ஜூனியர் நடிகர்களே என்றாலும், சிலர் முக்கியமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்களாம்.