தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு' படத்திற்கு கடந்த 29 வருடங்களில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. நீண்ட நாட்களாகவே இதன் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாராப்பூர்வமான அறிவிப்பு எதையும் காணோம்.
இந்தநிலையில் இதன் உண்மை நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் முதல் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது. “இந்தப்படத்திற்கான கதை திரைக்கதை எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மம்முட்டி பிசியாக இருப்பதால் உடனடியாக ஆரம்பிக்க இயலவில்லை. அவர் ஒகே சொன்னால் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு 2018ல் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார் இயக்குனர் கே.மது.