மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு' படத்திற்கு கடந்த 29 வருடங்களில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. நீண்ட நாட்களாகவே இதன் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாராப்பூர்வமான அறிவிப்பு எதையும் காணோம்.
இந்தநிலையில் இதன் உண்மை நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் முதல் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது. “இந்தப்படத்திற்கான கதை திரைக்கதை எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மம்முட்டி பிசியாக இருப்பதால் உடனடியாக ஆரம்பிக்க இயலவில்லை. அவர் ஒகே சொன்னால் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு 2018ல் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார் இயக்குனர் கே.மது.