‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு' படத்திற்கு கடந்த 29 வருடங்களில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. நீண்ட நாட்களாகவே இதன் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாராப்பூர்வமான அறிவிப்பு எதையும் காணோம்.
இந்தநிலையில் இதன் உண்மை நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் முதல் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது. “இந்தப்படத்திற்கான கதை திரைக்கதை எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மம்முட்டி பிசியாக இருப்பதால் உடனடியாக ஆரம்பிக்க இயலவில்லை. அவர் ஒகே சொன்னால் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு 2018ல் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார் இயக்குனர் கே.மது.