'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்த படம் ராஜூ ஹரி காதி-2. இப்படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக ராம் கோபால் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கிறார் நாகார்ஜூனா. ஆக்சன் கலந்த காமெடி கதையில் உருவாகும் இந்த படம் குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், தற்போது தனது டுவிட்டரில் அந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ள நாகார்ஜூனா, நவம்பர் 20-ந்தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து தான் இயக்கிய சிவா படத்தை தனது தந்தையை வைத்து கிளாப்ஸ் அடிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கினார் ராம்கோபால்வர்மா. இந்த நிலையில், இந்த புதிய படத்தை தனது அம்மாவை கிளாப்ஸ் அடிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கப்போகிறாராம். இந்த தகவலை ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.