தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. பல படங்களையும் இயக்கி உள்ளார். தமிழில் விஷாலுடன் சத்யம் படத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் குதித்த உபேந்திரா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் அந்தக் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனிக் கட்சி தொடங்கினார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் கர்நாடக பிரக்ஷ்னவந்தா ஜனதா பக்ஷா (கே.பி.ஜே.பி) என்ற பெயரில் புதிய கட்சிக்கு பெயர் சூட்டினார். அவரது மனைவியும், நடிகையுமான பிரியங்கா திரிவேதியும் அதில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காக்கி உடை அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உபேந்திரா "நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. அரசியல்வாதிகள் அதனை சரிசெய்யவில்லை. நான் ஒரு புரட்சியை ஏற்படுத்துவேன். மக்களின் வரிபணத்தை கொண்டு அவர்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றுவோம். எனது கட்சியில் கல்வி, மருத்துவம், விவசாயம் என அனைத்து துறையிலும் இருப்பவர்கள் இணைந்திருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம்" என்றார்.