அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நிவின்பாலி நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். பெங்களூரை சேர்ந்த இவருக்கு கடந்த சில மாதங்களாக பிராங்க்ளின் விசில் என்பவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ரெபா, போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்த இவர், ஒரு கட்டத்தில் ரெபாவின் போன் நம்பரை தெரிந்து கொண்டு அடிக்கடி அழைப்பது, ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்புவது என தொந்தரவுகளை தொடர்ந்துள்ளார். இதனால் இவரைப்பற்றி பசவன்குடி காவல்நிலையத்தில் ரெபா புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.