மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானால் படங்களின் வசூல் பாதிக்கும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆனால், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள நா பேரு சூர்யா படமும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள பாரத் அனே நேனு என்ற இரண்டு படங்களும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலர் அல்லு அர்ஜூனை அணுகி, ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று அவர் நடித்த படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் அதற்கு, நா பேரு சூர்யா படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வெளியிடுவதாக முதலில் நாங்கள் தான் அறிவித்தோம். ஆனால் இப்போது திடீரென்று மகேஷ்பாபு படக்குழுவினர் அதே தேதியை அறிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அறிவித்ததை அடுத்து நாங்கள் பின்வாங்கினால் அந்த படத்தைப்பார்த்து பயந்து விட்டது போலாகி விடும். அதனால் திட்டமிட்டபடி அதேநாளில் நான் நடித்த, நா பேரு சூர்யா படமும் திரைக்கு வரும் என்று உறுதிபட கூறிவிட்டாராம் அல்லுஅர்ஜூன்.