பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
லிங்கா படத்திற்கு பிறகு கன்னட நடிகர் நான் ஈ சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஹரிபிரியா, நடாஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பினை இதுவரை அறிவிக்காமல் இருந்து வந்த கே.எஸ்.ரவிக்குமார், கர்ணன், சமரசிம்ஹா ரெட்டி, நரசிம்ஹா ரெட்டி, நரசிம்ம நாயுடு, ஜெய் சிம்ஹா, சிம்ஹா என பல டைட்டீல்களில் எந்த டைட்டீலை படத்திற்கு வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வந்தார். இந்நிலையில், தற்போது ஜெய் சிம்ஹா என்ற தலைப்பினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஜெய்சிம்ஹா படம் 2018 சங்கராந்திக்கு வெளியாகிறது.