தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1989ல் சிவா என்ற படத்தில் ராம்கோபால்வர்மாவை இயக்குனராக்கியவர் நாகார்ஜூனா. அதன்பிறகு அன்ஹாம், கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களிலும் அவர்கள் கூட்டணி இணைந்தது. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில், தற்போது அப்பா-மகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் ஒரு ஆக்சன் படத்தில் மீண்டும் நாகார்ஜூனா-ராம்கோபால் வர்மா இணைகிறார்கள்.
மேலும், அடுத்தபடியாக லட்சுமியின் என்டிஆர் என்ற என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையை பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கயிருந்தார் ராம்கோபால்வர்மா. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜெயசிம்ஹா மற்றும் இன்னொரு தெலுங்கு படத்தையும் முடித்த பிறகே பாலகிருஷ்ணா, லட்சுமியின் என்டிஆர் படத்திற்கு கால்கீட் கொடுத்திருக்கிறாராம்.
அதனால் லட்சுமியின் என்டிஆர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் இயக்க திட்டமிட்டுள்ள ராம்கோபால்வர்மா, முன்னதாக, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை நவம்பர் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்போகிறாராம்.