பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தீபாவளிக்கு தமிழில் வெளியான விஜய்யின் மெர்சல் படம், அதிரின்டி என்ற பெயரில் அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகிறது. மெர்சல் படத்தின் இந்த தெலுங்கு பதிப்பிற்கு இதுவரை பெரிய எதிர்ப்புகள் இல்லாமல்தான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சி, வசனங்கள் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு காரணமாக ஆந்திராவில் இப்போதே அதிரின்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, ஏற்கனவே முடிவு செய்திருந்ததை விடவும் தற்போது தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் அதிரின்டியை வெளியிடவும் தயாராகி வருகிறார்களாம். அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிரின்டி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறதாம். ஆனால், தற்போது ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களையும் நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிரின்டி படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அந்த காட்சிகள் இல்லாமலேயே வெளியாகும் என்று தெரிகிறது.