ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேசிய விருது பெற்ற பின்னர், தற்போது அதிக படங்களில் நடித்து வரும் பிசியான காமெடியனாக மாறிவிட்டார் சுராஜ். அதிலும் காமெடி என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் சில இயக்குனர்கள் இவரை உருமாற்றி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் பஹத் பாசிலும் இவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திருக்சாட்சியும்' படம் ஒரு நல்ல உதாரணம்.. அந்தவகையில் தற்போது 'குட்டன் பிள்ளையுடே சிவராத்திரி' மற்றும் சவாரி என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு..
இதில் சவாரி' படத்தில் தேவஸ்தானத்தில் வேலைபார்க்கும் அலுவலராக நடித்துள்ளார் சுராஜ். அசோக் நாயர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹைலைட்டான இன்னொரு விஷயம் இந்தப்படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம் நடிகர் திலீப். சுராஜிடம் தான் கொண்டுள்ள நட்புக்காகவே திலீப் இப்படி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ரிங் மாஸ்டர், லைப் ஆப் ஜோஸுட்டி, சந்திரேட்டன் எவிடயா, டூ கண்ட்ரீஸ் என நான்கு படங்களில் திலீப்புடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு, தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள பேரன்பு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.