இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து நடித்துவரும் மலையாள குணச்சித்திர நடிகரான அலான்சியர் லே, அரசியல் விஷயங்களில் தனது கருத்தையும், எதிர்ப்பையும் கூட வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்க தயங்காதவர்.
கடந்த ஜனவரி மாதம் பிஜேபி கட்சிக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக காசர்கோடு சென்ற அலான்சியர், அங்கே அமெரிக்க கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு, ஒரு வேட்டியை மட்டும் உடுத்திக்கொண்டு, மஞ்சப்பையுடன் பஸ் ஏறி அமெரிக்கா போவதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
சமீபத்திலும் கூட வேறொரு விஷயத்திற்காக இன்னொரு வித்தியாசமான எதிர்ப்பை காட்டியுள்ளார் அலான்சியர் லே. பிஜேபியை சேர்ந்த சரோஜ் பாண்டே என்கிற பெண் அரசியல்வாதி, “பிஜேபி நடத்தும் பேரணிகள் பக்கம் குறைசொல்லும் விதமாக பார்வையை திருப்பும சி.பி.எம் கட்சிக்காரர்களின் கண்களை பிடுங்கி எறிந்துவிடுவேன்” என சர்ச்சையாக பேசினார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்த அலான்சியர் லே, தனது கண்களை கட்டிக்கொண்டு தனது பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரோஜ் பாண்டே மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.