'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
மம்முட்டி நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. அதை தொடர்ந்து மம்முட்டி நடிப்பில் மீண்டும் ஒரு வரலாற்றுப்படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெயர் 'மாமாங்கம்'.
17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை இது. சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தை சஜீவ் பிள்ளை என்பவர் இயக்கவுள்ளார். இவர் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..
இந்தப்படத்தின் கதையை சுமார் 12 வருட காலம் ஆய்வு செய்து உருவாக்கியுள்ளாராம் சஜீவ் பிள்ளை. இந்தப்படத்தின் பட்ஜெட் 30 கோடி ரூபாயாம். மம்முட்டி படங்களிலேயே இவ்வளவு அதிக பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பது இதுதான் முதன்முறையாகும்.. மோகன்லால், பிருத்விராஜ், நிவின்பாலி என முன்னணி நடிகர்கள் சிலரும் அடுத்தடுத்து வரலாற்று படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.