'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிருத்விராஜ் - பார்வதி மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் 'மை ஸ்டோரி'. இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இந்தப்படம் குறித்து உற்சாகமாக பேசியவர் தான் பிருத்விராஜ். ஆனால் தற்போது பாதிப்படம் முடிந்த நிலையில், பிருத்விராஜ் மீது தனது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு கால்ஷீட் தரவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார் இயக்குனரும், இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ரோஷினி தினகர்.. இதுபற்றிய பஞ்சாயத்து மலையாள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்திற்கும் புகாராக போனது.
இதுகுறித்து பிருத்விராஜ் எந்த கருத்தும் கூறாத நிலையில் படத்தின் நாயகியான பார்வதி, பிருத்விராஜ் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மையில்லை என மறுத்துள்ளார். மேலும் பாதிக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகியது. அதற்கடுத்த ஷூட்டிங் தேதிகள் பற்றி எங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை.. நாங்கள் படக்குழுவினருடன் தொடர்பில் தான் இருந்து வந்தோம். ரோஷினி தினகர் சொல்வதுபோல பிருத்விராஜ் நடந்துகொள்ள வாய்ப்பே இல்லை. பெண்களுக்கு எதிராக ஒரு அநீதி நடக்கும்போது குரல்கொடுப்பது போல, ஆண்களுக்கு எதிராக அநீதி நடந்தாலும் குரல் கொடுக்க நான் தயங்க மாட்டேன் என கூறியுள்ளார் பார்வதி.
இந்தநிலையில் இந்த பஞ்சயாத்து ஒருவழியாக பேசி முடிக்கப்பட்டு 'மை ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்-18ஆம் தேதி துவங்க இருப்பதாக முடிவாகியுள்ளது. அதேசமயம் அந்த தேதியில் துவங்க இருந்த அஞ்சலி மேனன் படம் இன்னும் கொஞ்ச நாள் தள்ளி, அதாவது 'மை ஸ்டோரி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.