'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள இளம் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆசிப் அலி. மினிமம் கியாரண்டி படங்களை தருவதில் வல்லவரான இவரது தம்பி அஸ்கர் அலியும் சமீபத்தில் வெளியான 'ஹனி பீ-2.5' படம் மூலம் கதாநாயகனாக மாறினார். இப்போது அஸ்கர் அலி 'காமுகி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக 'இதிகாசா' என்கிற படத்தை இயக்கிய பினு என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார் '8 தோட்டாக்கள்' நாயகி அபர்ணா பாலமுரளி.. பார்வை சவால் கொண்ட கதாநாயகனுக்கும் அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் இளமங்கைக்குமான காதல் தான் இந்த காமுகி படம். அதனால் உலக பார்வை தினமான நேற்று கேரளாவில் உள்ள ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் இருந்து பார்வை சவால் திறனாளிகள் நடத்திய 'பிளைன்ட் வாக்'கில் அபர்ணா, அஸ்கர் அலி, இயக்குனர் பின்னு உள்ளிட்டோர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு கலந்துகொண்டனர்.. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரையும் வழி நடத்தி அழைத்துச் சென்றதும் பார்வை சவால் கொண்ட திறனாளி ஒருவர் தானாம்.