‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நாகர்ஜூனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'ராஜூ கரி கதி-2'. இந்தப்படத்தை இயக்குனர் ஒம்கர் இயக்கியுள்ளார். இது அவர் 2015ல் தெலுங்கு இயக்கிய 'ராஜூ கரி கதி' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மருமகள் சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரர் படம் என்றாலும் காமெடி முலாம் பூசப்பட்டு உருவாகியுள்ளது இந்தப்படம்..
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை கடந்த வருடம் மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'பிரேதம்' என்கிற படத்தில் இருந்து எடுத்துள்ளார் இயக்குனர் ஒம்கர். பிரேதம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி, ஆனால் அப்படியே அப்பட்டமாக காப்பி பண்ணாமல் அதில் உள்ள முக்கியமான 3௦ சதவீத கதையை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய டீமை வைத்து புதிதாகவே திரைக்கதை எழுதியுள்ளாராம் ஒம்கர். அதனால் இந்தப்படத்தை 'பிரேதம்' படத்தின் ரீமேக் என்பதைவிட அதன் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்கிறார் டைரக்டர் ஒம்கர்.