டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாகர்ஜூனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'ராஜூ கரி கதி-2'. இந்தப்படத்தை இயக்குனர் ஒம்கர் இயக்கியுள்ளார். இது அவர் 2015ல் தெலுங்கு இயக்கிய 'ராஜூ கரி கதி' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மருமகள் சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரர் படம் என்றாலும் காமெடி முலாம் பூசப்பட்டு உருவாகியுள்ளது இந்தப்படம்..
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை கடந்த வருடம் மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'பிரேதம்' என்கிற படத்தில் இருந்து எடுத்துள்ளார் இயக்குனர் ஒம்கர். பிரேதம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கி, ஆனால் அப்படியே அப்பட்டமாக காப்பி பண்ணாமல் அதில் உள்ள முக்கியமான 3௦ சதவீத கதையை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய டீமை வைத்து புதிதாகவே திரைக்கதை எழுதியுள்ளாராம் ஒம்கர். அதனால் இந்தப்படத்தை 'பிரேதம்' படத்தின் ரீமேக் என்பதைவிட அதன் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்கிறார் டைரக்டர் ஒம்கர்.