'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
வட இந்திய நடிகையான ரகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். இதுவரை வட இந்தியாவில் இருந்தபடியே படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத், சென்னை என வந்து சென்று கொண்டிருந்த அவர், விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து குடியேறவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கானாவின் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற பெண்களுக்கான அமைப்பில் தூதராகியிருக்கிறார் அவர்.
அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேட்டி பச்சோ பேட்டி பாத்ஹோ என்ற அமைப்பை பல மாநிலங்களில் உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் உருவாக்கியுள்ள அந்த அமைப்பின் தூதராக தற்போது ரகுல் பிரீத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெரிவித்துள்ள அவர், இந்த பொறுப்பை எனக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.