டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நல பாதுகாப்பு அமைப்பை துவங்கினார்கள். இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
இருந்தாலும் இதில் ஆக்டிவாக செயல்படுபவர்கள் என்றால் நடிகைகள் ரம்யா நம்பீசனும், ரீமா கல்லிங்கலும் தான். தற்போது இந்த அமைப்பின் புதிய திட்டமாக மலையாள நடிகர் சங்க நிர்வாக குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிற கோரிக்கையை உயர்த்தி பிடித்துள்ளார் ரம்யா நம்பீசன். இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன்..
இதுகுறித்து ரம்யா கூறும்போது, “ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப்பாதி பெண்கள் இருந்தால் தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இதுகுறித்து, வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்.
திலீப்பின் 'ராம்லீலா' படத்தை தடுக்காதீர்கள் என மஞ்சு வாரியார் சொன்னது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியது சிலர் சொல்வது போல மம்முட்டி, பிருத்விராஜை சந்தோஷப்படுத்த எடுத்த தனிப்பட்ட முடிவு ஒன்று அல்ல. அது அவர்கள் பார்வையாக இருக்கலாம்.. ஆனால் பொறுப்பில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் அது. ஒருவேளை திலீப் குற்றமற்றவர் என நிரூபணமானால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அந்த தீர்மானத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்” என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.