அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த வாரம் துல்கர் சல்மானின் இருமொழிப்படமான 'சோலோ' மலையாளத்தில் மட்டும் வெளியானது. ஆனால் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி பெறாமலேயே க்ளைமாக்ஸை ரீ எடிட் செய்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு.
இதற்கு இயக்குனர் பிஜாய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தம் கலந்த கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தை ஏன் ரீ எடிட் செய்தோம் என படத்தின் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, 'படத்தின் வேலைகள் முடிந்தபின் படத்தை போட்டு பார்த்தபோது, இது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்காது என தெரியவந்தது. நானும் ஒரு ரசிகனாக இந்தப்படத்தை பார்த்தபோது, நான்காம் பகுதி, அதாவது ருத்ராவின் உலகம் எபிசோடில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ஏற்கும் விதமாக இல்லை. அதனால் இயக்குனரிடம் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் மாற்றுங்கள் என கூறினேன்..
அதுமட்டுமல்ல, இந்த நான்கு படங்களின் வரிசையை கொஞ்சம் மாற்றி, திரிலோக்கின் உலகம் எபிசோடை கடைசியாக வைக்கும்படியும் சொன்னேன்.. காரணம் அந்த பகுதிதான் ஒரு க்ளைமாக்ஸ்க்கு உண்டான நிறைவுடன் இருந்தது. ஆனால் இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் இயக்குனர் பிஜாய் நம்பியார். எதிர்பார்த்த மாதிரியே படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களே நிறைய வர ஆரம்பித்தன. வேறுவழியில்லாத நிலையில் தான் 'சோலோ' படத்தை ரீ எடிட் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ.